கௌரவமாக ராஜினாமா செய்தார் தலைவர்!



இலங்கை ஜனாதிபதி கோத்தாபாயவின்  சமூக ஊடகங்களை முடக்கும் உத்தரவை எதிர்த்து  இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவரது இந்த இராஜினாமாவையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி நாட்டுக்காக தங்களால் இயன்றதைச் செய்ய முயன்ற சிலரில் ஓஷத சேனநாயக்க ஒருவர் என சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. 

கோத்தபாயவின் வெற்றிக்காக சமூக ஊடகங்கள் ஊடாக முக்கிய பங்காற்றியிருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்க்கது.

No comments