இலங்கைக்கு இந்தியா டீசலையும் கடன்கொடுக்கின்றது!



இலங்கை விடுத்த அவசர வேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40000 தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது.

கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன் உதவியின் கீழ் வழங்கப்படவுள்ள மாதாந்த எரிபொருள விநியோகத்திற்கு மேலதிகமாக அவசரமாக டீசலை வழங்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை  இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது .

ஐஓசி இலங்கைக்கு 40,000 தொன் எரிபொருளை விரைவில் வழங்கவுள்ளது என இந்த விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியா இலங்கையின் அவசரவேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த சில வாரங்களாக எரிபொருளிற்கு திடீர் – மோசமான பற்றாக்குறை நிலவுவதன் காரணமாகவே இலங்கை இ;ந்த வேண்டுகோளை விடுத்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவி;ன் உள்ளுர் தேவைகளை கருத்திலெடுத்த பின்னர் இலங்கைக்கு தேவையான டீசலை அனுப்புவது குறித்து ஆராயப்படுகின்றது, இவற்றை அனுப்புவதற்கான கப்பல்களை ஏற்பாடு செய்வதும் பிரச்சினையாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments