எரிபொருள் வந்தாலும் மின்துண்டிப்பு தொடர்கிறது!



இலங்கையில் நாள் ஒன்றிற்கு  ஜந்து மணிநேர மின்துண்டிப்பு அமுலில்.உள்ளது.

இந்நிலையில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய , ஒரு கப்பல் 28,500 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருளைக் கொண்டு வரவுள்ளது.

மற்றைய கப்பலில் 30,300 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் கொண்டு வரப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று வரவிருக்கும் இரண்டு கப்பல்களும் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளன.

இதேவேளை, 38,400 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பலை 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனீட்டு பத்திரத்துடன் இன்று இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதுடன், எரிபொருள் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது

No comments