தமிழக மீனவர்கள்:நேற்று விடுதலை-இன்று கைது!

 


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு காரைநகர், கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே நேற்யை தினம் கைதாகி சிறையிலிருந்த ஒரு தொகுதி மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments