இலங்கையில் பாரிய இறக்குமதி மோசடி கண்டுபிடிப்பாம்!



இலங்கையில்  இறக்குமதி சட்டங்களை மீறி உருளை கிழங்கு மூடைக்கு மறைத்து நாட்டிற்குள் கடத்தப்பட்ட பீட்ரூட்களை சுங்கதிணைக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

16000 தொன் பீட்ரூட்டினை 44,000 தொன் உருளைகிழங்கிற்குள் மறைத்து 40 அடி ரீவர் கொள்கலனில் கொண்டுவந்துள்ளனர் மீட்கப்பட்ட பீட்ரூட்டின் பெறுமதி 3.2மில்லியன் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளுர் இறக்குமதியை ஊக்குவிப்பதாக தெரிவித்து பீட்ருட் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments