யாழில் வீடு புகுந்த கும்பல் அட்டகாசம்


யாழ்ப்பாணம், கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அத்தோடு வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச் சந்தியில் போட்டு சேதப்படுத்திவிட்டும் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் சென்ற வன்முறைக் கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் சந்தியில் தொலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்திவருபவரின் வீட்டிலே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments