பிரதேச சபை தவிசாளருக்கும் விசாரணை அழைப்பு!





கூட்டமைப்பு சார்பு  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு கிளிநொச்சியின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு 4ம் மாடியிலும், கிளிநொச்சியிலும் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்து நீண்டநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் பச்சிலைப்பள்ளி சபையின் தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments