திசை திருப்ப கைதுகள்!

கிண்ணியா படகு விபத்தால் மக்கள் சீறறமடைந்துள்ள நிலையில் அதனை போக்க அரசு கைதுகளை ஆரம்பித்துள்ளது.

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி இழுவை படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட இழுவை படகை  இயக்கிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த இழுவை படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

No comments