மட்டக்களப்பில் சடலம் மீட்பு!!


மட்டக்களப்பு, வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமொன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி, நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தின் வயற் பகுதியிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமை வெல்லாவெளி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி, சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவுக்கு இணங்க சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments