அடங்க மறுக்கும் வாள்வெட்டுக்குழு!


யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , பொலிசாரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் வாள் வெட்டுக்குழு ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு புகுந்த வாள் வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.  

மோட்டார் சைக்கிளில் , வாளுகள் , கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.



No comments