கோத்தா சொத்து நிரூபமா பெயரில் வெளியில்?

இறுதி யுத்தத்தின் பின்னராக கோத்தபாய தரப்பினால் சுருட்டப்பட்ட பெருமளவு சொத்துக்களை தமது சகோதரியான நிரூபமா பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனராவென்ற கேள்வி பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே முன்னணி கோடீஸ்வர தமிழ் அரசியல்வாதியொருவர் நிரூபமா மகனுடன் தொழில் ரீதியில் முதலிட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் இப்பரபரப்பு தொற்றியுள்ளது.

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது.

இதில் இலங்கையின் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவருமான, நிரூபமா ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில்,   நிரூபமா பிரதியமைச்சராக பதவி வகித்தார்.

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிரூபமா பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் இரகசிய ஆவணங்கள், 2016 இல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த ஆவணங்கள் வெளியானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் போன்செகா, ஒரு கோடிக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 2016ல் வெளியிட்டது.

குறிப்பாக இலங்கையில் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்சக்களின் நெருங்கிய உறவினருமான நிரூபமாவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments