தெற்கும் குரல் எழுப்பவேண்டும்!

அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய வேண்டுமென, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கைதிகளுடைய விடயத்தில் தெற்கில் செயற்படுகின்ற நீதிமன்றங்கள் ஒரு விதமாகவும், வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற நீதிமன்றங்கள் இன்னொரு விதமாகவும் செயற்படுவது குறித்து ஐ. நா போன்ற அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம் என்றார்.

அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய வேண்டும் என்றார்.

அத்துடன், 'பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்கின்ற குரல் தெற்கிலும் இடம்பெற வேண்டும். அரசியல் கைதிகள் எந்த விதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்' என்றும், அவர் கூறினார்.



No comments