முரசுமோட்டையில் இளைஞன் மீது தாக்குதல்!! உந்துருளியும் எரிப்பு!!


கிளிநொச்சி, முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் உந்துருளி ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.

No comments