வாக்களித்தவர்களிற்காகவேனும் முடக்குங்கள்!



நாட்டை முடக்கமாட்டேனென கோத்தபாய விடாப்பிடியாக உள்ள நிலையில் முன்னணி தமிழ் மருத்துவ நிபுணர் ஒருவர் வரைந்துள்ள கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது உங்களைச் சென்றடையும் என்று நான் நம்பவில்லை, அல்லது நீங்கள் இதனால் அசைய மாட்டீர்கள்.

நான் 6.9 மில்லியன் மக்களால் அதிகாரத்திற்கு வாக்களிக்கப்பட்ட ஒரு தலைவருக்கு அறிவுரை கூறக்கூடிய நபர் அல்ல. அதற்கு அருகிலும் நான் இல்லை.

ஆனால் இந்த வேண்டுகோள் முக்கியமானது. ஏனென்றால் டெல்டா மாறுபாடு காரணமாக இப்போது நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு உங்களுக்கு வாக்களித்த அனைவர்; மீதும் குற்றம் சாட்டப்படவேண்டுமென நான் பார்க்கிறேன், நான் நிச்சயமாக இந்த நாட்டையும் அதன் மக்களையும் நேசிக்கும் ஒரு குடிமகன் மற்றும் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டிய கடமை உடையவன்.

தொற்றுநோயை அறிந்தவர்களின் கணிப் பிரகாரம் ஜனவரி 2022 க்குள் 18000 குடிமக்களை இழக்க நேரிடும்.

எளிமையான அறிவியல் என்னவென்றால் பலியாகப் போகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள், நாட்டிற்கான பெரும் எதிர்பார்ப்புகளுடன் உங்களை அதிகாரத்திற்கு வர வாக்களித்தவர்களாவர்.

நிபுணர்களைக் கேளுங்கள், 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவரவும், பின்னர் இரண்டு வாரங்கள் பூட்டப்படவும் வேண்டும் வலியுறுத்துகின்றனர்.

நிச்சயமாக அத்தியாவசிய சேவைகள் தொடரலாம்.

வேறு வழியில்லை, நாங்கள் பார்ப்பதை சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பு மருத்துவ வல்லுநர்கள் பார்த்தார்கள்,ஆனாலும் எந்த காரணத்திற்காகவும் நீங்கள் இவற்றை கேட்க இயலவில்லையென குற்றம் சாட்டப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்செலிசாயாவின் உறுதிமொழியில், உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நீங்கள் ஜனாதிபதியாக இருப்பீர்கள் என்று அறிவித்தீர்கள்.

எனது வேண்டுகோள், தயவுசெய்து, உங்களை ஆட்சிக்கு வர கைகொடுத்தவர்களிற்கு செவிசாய்க்கவும்.கடவுள் உங்களையும் எங்கள் நாட்டையும் ஆசீர்வதிப்பாராக எனவும் மருத்துவ நிபுணர் மன்றாடியிருக்கின்றார்.


No comments