விக்கி,மனோ இடையில் வெளியேறினர்?



அரசின் அடக்குமுறைகளை கண்டித்து  இன்று மாலை சுதந்திர சதுக்கத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளமன்ற உறுப்பினர்களின்  பங்களிப்புடன் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் , சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இடைநடுவில் போராட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்த பதாகைகள் தனிச்சிங்கள மொழியில் இருந்ததாகவும் ஆங்கில மொழியில் கூட பதாகைகள் இருக்கவில்லை என்பதால் விசனமடைந்து இடைநடுவில் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments