யாழில் நாரந்தனை முடக்கம்!



யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் இன்று காலை 6 மணி முதல் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பது இனங்காணப்பட்ட நிலையில் இந்த இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.

- யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு

- மாத்தறை - மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்

- களுத்துறை - தொடங்கொட பொலிஸ் பிரிவில் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments