தொண்டமாற்றில் கஞ்சா மற்றும் மஞ்சளுடன் இருவர் கைது!


தொண்டைமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கஞ்சா போதைப்பொருள்  கடத்திய  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும் 5 கிலோ உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் 28 வயது 34 வயதுடைய பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கஞ்சா போதைப்பொருட்களும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments