இரு பிள்ளைகளின் தாயைக் கொன்ற இளைஞன்!!


பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் இருந்து கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண்னொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த சடலத்தை மீட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான இரு பிள்ளைகளின் பெருமாள் மாலா எனும் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராரே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்படும் போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் தெரிவித்தனர்.


சடலம் நாவலப்பிட்டி நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments