நங்கூரத்துடன் கஞ்சா!



யாழ்.மாதகல் கடலில் நங்கூரத்துடன் பிணைக்கப்பட்டு கடலுக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 93 கிலோ கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடல் வழியாக கஞ்சா போதை பொருள் கடத்தி வரப்பட்டு நங்கூரம் ஒன்றில் பிணைத்து அதனை கடலுக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பில் கடற்படையினரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments