மிஹிந்தலையில் அரச பொசன் விழா



அரச பொசன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மிஹிந்தலை புனித பூமியில் நடைபெறும் அரச பொசன் விழா தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்முறை அரச பொசன் விழாவை முன்னிட்டு பிரதான நிகழ்வு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம ரஜ மஹா விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச பொசன் விழாவை முன்னிட்டு மிஹிந்தலை சுற்றுவட்ட பாதையை புனரமைத்து தருமாறு மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் கௌரவ பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை துரிதமாக நிறைவேற்றுமாறு பிரதமரினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R.W.R. பேமசிறி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

No comments