அனலைதீவினூடாகவும் கஞ்சா!



அனலைதீவு கடற்பரப்பால் இந்தியாலிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனலைதீவு கடல் பகுதியால் இருவர் கஞ்சா கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அவர்கள் கடலில் வைத்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த கஞ்சாப் பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் 26வயதுடையவரெனவும் மற்றையவர் 31 வயதுடையவரெனவும் தெரியவந்துள்ளது.மன்னார் மற்றும் அனலைதீவு பகுதியையும் சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர்.


No comments