ரிஜடி சித்திரவதை கூடங்களிலேயே தடுத்து வைக்கலாம்!



இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுபவர்களை தமது சித்திரவதை கூடங்களிலேயே தேவையான காலம் தடுத்து வைக்க இலங்கை அரசு வர்த்தமானி மூலம் அனுமதித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும் கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 145, கிருலப்பனை அவன்யூ, கொழும்பு-5 கிருலப்பனை பொலிஸ் பிரிவு ஆகிய இரு இடங்களிலேயே இவ்வாறானவர்கள் தடுத்துவைக்கப்படுவார்கள் என்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments