உதய கம்மன்பிலவை வீடு செல்ல கோரும் பெரமுன!

 



கோத்தா அரசை எல்லா பக்கமும் நெருக்கடி சூழந்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலையேற்றம் சூடுபிடித்துள்ளது.

இதனிடையே மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில ராஜினாமா செய்ய வேண்டுமென பங்காளிக்கட்சியான பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

இதனிடையே திடீரென அரசு இவ்வளவு  நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, கபினட் தீர்மானத்துக்கு பொறுப்பேற்று ஜனாதிபதியல்லவா ராஜினாமா செய்யவேண்டும்.

ஆனால் உதய கம்மன்பில அரசில் உள்ள சிறுகட்சி அமைச்சர். இது ஏதோ வீடு தீப்பற்றியதற்கு, வீட்டில் வளர்க்கும் கூண்டுக்கிளியை பலிகடா ஆக்குவதாக தெரியுது..! 

ஆனாலும், காலமெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக விசம் கக்கி வந்த கம்மன்பிலவின் கதியை நினைத்து கவலைப்பட ஏதுமில்லை..!

இதற்கு முன்னால் அரசு தலைமையின் கோபத்துக்கு ஆளாகி வாயை மூடிக்கொண்டு  இருக்கும் வீரவன்ச கதியே இன்று இவருக்கு..! 

அரசன் அன்று..! தெய்வம் நின்று..!கொல்லுமென கருத்து பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.


No comments