சுப்பர்மடத்தில் 45 கஞ்சாப் பொதிகள் மீட்பு!


யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை சிற்றூர்த்தி ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை, சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

45 பொதிகளில் கஞ்சா போதைப்பொருள் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டதாகவும், கடத்தலுக்கு பயன்படுத்திய சிற்றூர்தியும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றொரு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments