தடுப்பூசி விரயம்:சிலர் பதவி நீக்கம்!


கிழக்கு மாகாண வைத்தியசாலை ஒன்றில் கவலையீனமாக கொரோனா மருந்துகள் விரயமாக்கப்பட்டமை தொடர்பில் பணியாளர்கள் சிலர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக ஏற்றப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்ற போது தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்  மாலை பணியை முடித்துவிட்டு செல்லும் போது  தடுப்பூசி குப்பிகளை குளிரூட்டியில் வைக்காது வெளியே வைத்துவிட்டு சென்றுள்ளனர் இச்சம்பவம் கடந்த 1 ஆம் ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு  அதிகாரிகளின் அசமந்த போக்கினால், வீணாகிப்போன அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் பணி  மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அதில், மருந்து நிரப்பப்பட்ட 57 குப்பிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், வெளியிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை காலையில், ஏனையோருக்கு தடுப்பூசி எற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், 4 பாகை தொடக்கம் 8 பாகை வெப்பத்தில், குளிர்தானப் பெட்டியில் வைக்கப்படவேண்டிய தடுப்பூசி மருந்துகள் வெளியிலேயே இருந்துள்ளன.

கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களுக்கு மேல் வெளியில் வைக்கப்பட்டுள்ளதை கண்டனர். இதனால் இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

ஒரு மருந்து குப்பியிலுள்ள மருந்து, 10 பேருக்கு ஏற்ற முடியும். அங்கு சுமார் 57 மருந்து குப்பிகள் வீணாகியுள்ளன. இதனால், சுமார் 600 பேருக்கு ஏற்றக்கூடிய மருந்து குப்பிகள் வீணாகி போகியுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து சிலர் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.


No comments