இலங்கை:வேலையும் பகுதி பகுதியாக



தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அரச ஊழியர்களை பகுதி,பகுதியாக வேலை செய்ய அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை (26) வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து  பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது. இதனையடுத்து பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், 27,28ஆம் திகதிகளில் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments