கோட்டபாய-பிள்ளையான் சந்திப்பு:கிழக்கில் அச்சம்!

 




கோட்டாபய ராஜபக்சவை சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) தனித்து சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் ஆட்கடத்தல்கள்,கொலைகள் கிழக்கில் அரங்கேறலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயினும் சந்திப்பின் போது விரைவில் மட்டக்களப்புக்கு வருவதாக ஜனாதிபதி உறுதிமொழி அளித்துள்ளதாகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறியுள்ளார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து பேசப்பட்டதாகவும், இதன் போது உடனடி தீர்வுகள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் முன்னர் கொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானை தனிப்பட அழைத்து பேசியுள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


No comments