யாழில் கொரோனா தொற்று 500 ஐ தாண்டியது! .



யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 500 இற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் வரை மொத்த 496 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொற்று நோயாளர் தொகை 500 ஐ கடந்துள்ளது.

No comments