வவுனியாவில் மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு


வவுனியா – ஓமந்தை  நவ்வி பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் நேற்றைய தினம் (8) மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு படிக்கச் சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை காவல் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த சிறுவனின் புத்தகபை குறித்த சிறுவனின் சக மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒமந்தை காவல்றையினர் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன் அவ்வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய ப.அபிசாந் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

No comments