பூநகரி பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது


பூநகரியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி காவல்துறை விசேட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபரிடமிருந்து இவ்வாறு உள்ளூர் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments