#P2P: கைதாகி விடுதலை!



பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த செயற்பாட்டாளர் ஒருவர் கைதாகி விடுதலையாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்;.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞன்  பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்து வந்திருந்த நிலையில் மனோகணேசனிடம் கொழும்பு வதிவிடத்தில் வைத்தும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இதனிடையே கைதினையடுத்து யாழ்ப்பாணத்தில் வடகிழக்கு சிவில் சமூக அமைய பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆராய்ந்திருந்தனர்.

No comments