கொரோனா கவலை:காதலர் தினத்திற்கு தடை!



இலங்கையில் கொவிட் 19 கவலையால் காதலர் தினத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை காதலர் தினத்தை முன்னிட்டான களியாட்டங்களிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வசதிகள் வழங்குபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக இடுகைகளில் பிப்ரவரி 14 மற்றும் அதற்கு முந்தைய நாளில் காதலர் தினத்தில் நிகழ்வுகள் நடைபெற திட்டமிட்டுள்ளதால் செய்திகள் வந்திருந்தது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர், சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி பெறாமல் எந்தவொரு தரப்பும் நிகழ்வையும் ஏற்பாடு செய்ய முடியாது.

சுகாதார அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் காதலர் தின விருந்துகளை அனுமதித்த ஹோட்டல்கள் அல்லது உணவகங்களை போலீசார் சீல் வைப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


No comments