பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர் கருணாவின் நண்பராம்?



கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபர் அவரது முன்னாள் நண்பரென தெரியவந்துள்ளது.


முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை, நேற்றைய தினம் சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.


குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வயலிற்கு பசைளை இடுவதற்காக செல்கையில்,  கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில் கருணா அம்மானை சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார் .

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த காலப்பகுதியில் நண்பராக இருந்த கருணா தற்போது எதனைக்கண்டாலும் அஞ்சுவதாக மக்கள் கேலி செய்துள்ளனர்.


No comments