தையிட்டிக்கு இராணுவத்தளபதியுடன் வந்தார் புத்தர்?



கொரோனா தனிமைப்படுத்தல்களை புறந்தள்ளி வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தரக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தையிட்டி காவலரணுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments