ஒருபுறம் ஆர்ஸ்ஸ், மறுபுறம் காந்திய சிந்தனை, நடுவே ரஜினி! குழம்பியுள்ள தமிழ் நாடு;


வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் யார் இந்த அர்ஜூனமூர்த்தி என அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர், கலைஞர் கருணாநிதி காலத்திலேயே திமுக குடும்பத்துடன் நெருக்கமானவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பிஸ்னெஸ் பார்ட்னரகவும் இருந்திருக்கிறார். அதே சமயம் கலைஞரின் மகள் செல்வியின் மருமகனான ஜோதிமணி மற்றும் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் ஆகியோரின் நெருங்கிய உறவினர். இப்படி கலைஞரின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான அர்ஜூனமூர்த்தி திமுகவில் இணையவில்லை. மாறாக பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது

பாஜகவில் இருந்துகொண்டு திமுக குடும்பத்தோடு நட்பு பாராட்டியவர், இன்று ரஜினியின் பின்புலத்தில் இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் ரஜினி எடுக்கும் முடிவுகள் மற்றும் ரகசியங்கள் பாஜகவுக்கோ, திமுகவுக்கோ செல்லாது என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

அதேவேளை கட்சியின் மேர்ப்பர்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் தீவிர காமராஜர்காங்கிரஸ் பற்றாளரும் காந்திய மக்கள் இயக்கம் ஒன்றையும் நிறுவி நடத்தி வருகின்றவர், எனவே ஆர் ஸ் ஸ், சிந்தனையாளர், காந்திய சிந்தனையாளர் என இருவரையும் முக்கிய பொறுப்புக்கள் கொடுத்து ரஜனி கட்சியை கட்டமைத்துள்ளது பல்வேறு ஆய்வாளர்களுக்கு குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

 

No comments