கொழும்பில் திறப்பு?


கொழும்பில் மூடப்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடந்த ஏழு வாரங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த, இரும்பு மற்றும் உணவு தானிய வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள, கொழும்பு பழைய சோனகர் தெரு, குவாரி வீதிகளை, படிபடியாக திறக்க உடன்பாடு காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.  

கொட்டாஞ்சேனை, டேம் வீதி பொலிஸ் வலயங்களில் இப்பிரதேசங்கள் அமைந்துள்ளன. 

இது தொடர்பில் வர்த்தக சங்கங்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த பிரச்சினையை குழு கூட்டத்தில் பிரஸ்தாபித்திருந்தாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் தன்னுடன் மேல் மாகாண ஆளுநர், குழு தலைவர் பிரதீப் உதுகொட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முஜிபுர் ரஹ்மான் எம்பி, மேயர் ரோசி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


No comments