ஆஸ்திரியாவில் துப்பாக்கிச் சூடு! இருவர் பலி!


ஆஸ்திரியாவின் மத்திய வியன்னா நகரில் பரபரப்பான பகுதியில் திடீர் என புகுந்த துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக சுட்டனர்  இதில் 2 பேர்  பலியானார்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

ஆறு வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலின் போது காயமடைந்த ஒரு பெண் இன்று அதிகாலையில் காயங்களுடன் இறந்துவிட்டதாக வியன்னா மேயர் மைக்கேல் லுட்விக் தெரிவித்து உள்ளார். 

பயங்கரவாதி என சந்தேகப்படும் நபர் ஒருவர் காவல்துறையினரால் சட்டுக் கொல்லப்பட்டார்.

காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் நகர மையத்திலிருந்து விலகி இருக்கவும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் மக்களைகேட்டு கொண்டு உள்ளனர். இன்று பள்ளிகள் அனைத்தும்  மூடப்பட்டு உள்ளன.

சம்பவத்தின் போது ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.


No comments