நைஜீரியாவில் 110 விவசாயிகள் படுகொலை!


நைஜீரியாவின் வடக்குகிழக்கு பகுதியான 110 விவசாயிகள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டுப் படுகொலை

செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகுரி அருகே நடந்துள்ளது. முன்னர் 43 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னா 110 பேர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

போகோ ஹராம் மற்றும் இஸ்லாமிய அரசு மேற்கு ஆபிரிக்கா கிளர்ச்சிக் குழுக்கள் தீவிரமாக செயல்படும் ஒரு பிராந்தியத்தில் சமீபத்திய மாதங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

இத்தாக்குதலை நைஜீய அதிபர் முஹம்மடுபுஹாரி கண்டித்துள்ளார்.

ஆனால் இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்றகவில்லை. 



No comments