காரைநகர் முடக்கம்??



காரைநகர்  பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் இன்று மாலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலே காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன்  தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள்.அவர்களுக்குரிய பரிசோதனைகள் நாளை முதல்  ஆரம்பிக்கப்படவுள்ளது.  கிடைக்கின்ற முடிவுகளின் பிரகாரம் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும். 

யாழ்.மாவட்டத்தினை முடக்க வேண்டிய தேவையில்லை. எனினும் காரைநகர்  பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின்; முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments