காட்டிக்கொடுப்பு தேவை?



கொழும்பு உட்பட தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிலர் இன்னமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் நோய்க்காவியாக திரிகின்றனர் எனவும் இவர்களால் ஒட்டுமொத்த யாழ்.மாவட்டமும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிய நிலை வரலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

எனவே, பிரதேச ரீதியாக உள்ள சமூக செயற்பாட்டாளர்கள், சமூக நலனில் அக்கறை கொண்ட சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறையாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடப்படுகின்றது.

இதனிடையே இதனை காட்டிக்கொடுப்பல்ல வென கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் மக்களை காப்பாற்ற காட்டிக்கொடுப்பு தேவையென பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொழும்பு போன்ற இடங்களில் இருந்து வருகைதந்திருப்போர் தொடர்பாக உடனடியாக உங்கள் கிராம சேவையாளர் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தகவல் கொடுங்கள்.

கிராம சேவையாளர், பொதுச் சுகாதார பரிசோதகரின் தொலைபேசி இலக்கம் தெரியாவிடின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிவியுங்கள்.

இது அவரைக் காட்டிக்கொடுப்பாக கருதவேண்டாம். அவரையும் உங்களையும் மற்றவர்களையும் கொடிய உயிர்கொல்லி நோயில் இருந்து பாதுகாப்பதற்காக நீங்கள் செய்யும் சேவையாகும்

No comments