வடக்கில் 23?



வடக்கில் இன்றைய ஆய்வுகளில் 23பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் அனைவரும் தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் என யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 352 பேருக்கு  பரிசோதனைகள் செய்யப்பட்டது.

 பெரியகட்டு வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கும தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் பரிசோதனையில் யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தளில் இருக்கின்ற 3 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments