யாழில் நினைவேந்த அனுமதி: குழுவாக இல்லை!

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர ஒவ்வொரு தமிழ் பொதுமகனிற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தியுள்ள யாழ்.மேல்நீதிமன்று தேசிய

பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் விசாரிக்க மேல்நீதிமன்றிற்கு உரித்தில்லையெனவும் தீர்ப்பளித்துள்ளது.

யாழ்.மேல் நீதிமன்றில் மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வுத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குறிப்பாக உயிரிழந்த உறவுகளை மாவீரர் தினமெனும் பேரில் குழுவாக முன்னெடுக்கமுடியாதெனவும் அது தேசிய பாதுகாப்புடன் தொடர்புட்டதால் அது தொடர்பில் விசாரணை செய்ய மேல்நீதிமன்றிற்கு நியாயயாதிக்கமில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments