யேர்மனியில் நினைவேந்தப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எசன் நகரத்தின்

அயல் நகரங்கள் கொரோனா விசக்கிருமியின் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைத்த அந்நகரத்தின் அனுமதியைப் பயன்படுத்தியவாறு அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் நடாத்தப்பட்டது.மக்கள் தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தியபடி முதற் பெண் மாவீரருக்கு மாவீரர்கள்; வணக்கப் பாடலுடன் எசன் நகரத்தின் மத்தியில் தங்கள் இதயவணக்கத்தை மலர் தூவி சுடர் ஏற்றி வெளிப்படுத்தினார்கள்.





No comments