நிமலை நினைவுகூர்ந்தனர் அவன் நேசித்த மக்களும்!

 



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளன் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தலை வவுனியாவில் 1340வது போராடிக்கொண்டிருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களும் முன்னெடுத்துள்ளன.

ஊடக போராளி நிமலராஜனின்; படுகொலை தமிழ் ஜனநாயகத்தை கொன்றது.

தமிழரின் ஜனநாயகம் தமிழ்தேசியத்தை உயிர் மூச்சாக கொண்டது.

இலங்கை ஜனநாயகம் என்பது சிங்களவரின் ஜனநாயகம்,அது தமிழர்களை ஒடுக்குவதற்கு மாத்திரமே.தமிழர்களின் ஜனநாயகம் என்பது, பாதுகாப்பான,பாதுகாக்கப்பட்ட தமிழர் தாயகம் வரும் போது,தான் தமிழர் ஜனநாயகத்துக்கு உயிர் வரும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன.


No comments