என்ன பிடிக்கிறாய்: காணி பிடிக்கிறேன்?

பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இன்று வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர்

ஈடுபட்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை  உடனடியாக அவ்விடம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் சென்று மக்களுடன் இணைந்து சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்தினார்.

மொத்தமாக 344 ஏக்கர் வரையான வீஸ்தீரணமுடைய காணிகளையே குறித்த திணைக்களம் சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

மயானம் நெல்காயவிடும்தளம் பொதுமக்களின் வீடுகள் வயல்கள் உள்ளடங்கலாகவே உள்ள காணிகளையே சுவீகரிக்க முயற்சித்துள்ளனர்.

இவற்றுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் மக்களிடம் உள்ள நிலையில் 30 வருடங்களாக வயல்களை விதைத்து வருகின்ற நிலையில் தொடர்ந்து வயலின் விதைத்தால் கைது செய்யப்படுவர் என்றும் வனவளத்திணைக்களத்தினர் அச்சுறுத்தல் விடுத்தனர்.

No comments