ஆட்சேர்ப்பில் மும்முரமாக மாவை?


மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக சுமந்திரன் ஆதரவு தரப்புக்களை தன்பக்கம் இழுப்பதில் மாவை முனைப்பாக இருந்துவருகின்றார்.

ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற தலைவர்களை இழுத்து வந்த மாவை தரப்பு தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கத்தை நியமித்ததன் மூலம் அவரையும் கைகளுள் போட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச் செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் தலைவர்களாக செயற்பட்டு வந்த வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் ப.சத்தியலிங்கம் பொதுச் செயலாளராக செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரனின் முக்கிய ஆதரவாளராக சத்தியலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments