தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் பிரமுகர்கள்

இந்திய உளவு அமைப்பின் பணிப்பின் பேரில் சிறீசபாரத்தினால் பணிக்கப்பட்டு டெலோவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள்

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று (02) காலை இடம்பெற்றது.

இந்த நினைவு தினம் மறைந்த தர்மலிங்கத்தின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துனைவேந்தர் சிறி சற்குணராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.


No comments