கோத்தாவை கூட்டமைப்பே எதிர்த்தது:சரவணபவன்!


ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து நின்ற ஒரே தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என தெரிவித்துள்ளார் முன்னாள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அந்தத் தேர்தலில் கோத்தாபயவுக்கு எதிராக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் போடப்பட்டன. அதே உத்வேகத்துடன் கோத்தாவுக்கு எதிராக வாக்களித்த 3 லட்சத்து 20 ஆயிரம் பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் 7 ஆசனங்களையும் நாம் கைப்பற்ற முடியும். 

அதன் மூலம் தமிழர்கள் அனைவரும் இனப்படுகொலையாளியான கோத்தாபயவை எதிர்க்கிறோம் என்ற செய்தியை சர்வதேசத்துக்கும் உரக்கச் சொல்லமுடியும்.ஆகவே கோத்தாபயவின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு இங்கிருந்து ஒரு வாக்கும் போடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வீட்டுச் சின்னத்தில் வாக்களிக்க தமிழ் மக்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

No comments