அமிரினை நினைவில் வைத்துள்ள சரா?



கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின்  93வது பிறந்த நாள் யாழில் நினைவுகூரப்பட்டுள்ளது.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத்தலைவருமாகிய ஈ.சரவணபவன் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் சரவணபவனால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமிர்தலிங்கம் சிலை நிறுவப்பட்டிருந்தது.


No comments