பிறந்த தின நிகழ்வே கைதிற்கு காரணமாம்?


கரும்புலி தின முன்னெச்சரிக்கையாகவே கே.சிவாஜிலிங்கம் கொழும்பு உத்தரவில் கைதாகியுள்ளார்.இன்றிரவின் பின்னர் அவர் விடுவிக்கப்படலாமென வல்வெட்டித்துறை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


முன்னதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை காவல்; துறையினரால் வீட்டில் வைத்து இன்று காலை கைது செய்யப்படடிருந்தார். 

தேசிய தலைவரது பிறந்த தினத்தை 2018ம் ஆண்டில் தீருவிலில் முன்னெடுத்தமை தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments